சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, மக்கள் ஆணைக்கு அடிபணிந்து, ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் பதவி விலகவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் 5 மணியளவில் அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில், மக்களின் ஆணையை ஏற்றுக் கொண்டு பதவி விலகும் முடிவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. பிரதமர் பதவி விலகினால் அமைச்சரவையும் தானாகவே கலைக்கப்பட்டதாகி விடும். நாளை அதிபராகப் பதவியேற்றதும் […]
Category: செய்திகள்
சனாதிபதி தேர்தல் முடிவுகளே தமிழீழத்துக்கானதாக அமைந்துள்ளது!
இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகளையே தமிழீழத்துக்கானதாக எடுத்துக்கொள்ளலாம் என பாமக தலைவர் மருத்துவர் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்! இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஈழத் தமிழர்களின் எதிர்காலப் பாதுகாப்பு கருதி, எது நடக்கக்கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டினார்களோ, அது நடந்து விட்டது. ஆம்…. தமிழினத்தின் எதிரியான கோத்தபாய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இலங்கையில் அமைதியை ஏற்படுத்த எந்த வகையிலும் உதவாது. இலங்கையில் நேற்று நடைபெற்ற 8-ஆவது […]
சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ச
நடந்து முடிந்த எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச 13 இலட்சத்து 60 ஆயிரத்து 16 மேலதிக வாக்குகளினால் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். இதன்படி, கோத்தாபய ராஜபக்ச 16 மாவட்டங்களையும், சஜித் பிரேமதாச 6 மாவட்டங்களையும் கைப்பற்றியுள்ளனர். மொத்த வாக்குகள் கோத்தாபய ராஜபக்ச – 6,924,255 (69 இலட்சத்து 24 ஆயிரத்து 255). சஜித் பிரேமதாச – 5,564,239 (55 இலட்சத்து 64 ஆயிரத்து 239). அநுர குமார திஸாநாயக்க – 4,18553 (4 இலட்சத்து […]
வாக்களிப்பு வீதம் உயர்கிறது
நடைபெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் சில மாவட்டங்களில் 2 மணி வரையில் 60% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதன்படி, யாழ்ப்பாணம் – 55%, மன்னார் – 56.7%, முல்லைத்தீவு – 55.3%, திருகோணமலை – 65%, மட்டக்களப்பு – 54.7%, அநுராதபுரம் – 65%, பதுளை – 70%, அம்பாறை – 55%, நுவரெலியா – 60%, கண்டி – 70%, பொலனறுவை 72%, குருநாகல் – 60%, மாத்தறை – 65%, வவுனியா – 60%
வடக்கு சிறீலங்காவின் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும்!
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இம்முறையும் வடக்கு வாக்களிப்பே தாக்கத்தை செலுத்துமென இந்திய தூதரக தகவல்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக தென்னிலங்கையில் வாக்களிப்பு வித்தியாசம் குறிப்பிட்டு சொல்லத்தக்கதாக இருக்கமாட்டாதென தெரியவருகின்றது.ஆகக்கூடியது இருதரப்பிற்குமான வாக்கு வித்தியாசம் சுமார் இரண்டு இலட்சம் வரை இருக்கலாமென கணிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வடக்கு வாக்குகள் கூடிய தாக்கத்தை செலுத்துமென தெரியவருகின்றது. 2015ம் ஆண்டைய தேர்தல் போன்று மைத்திரி பெற்ற வாக்குகளை வடக்கிலும் பெற்றால் சஜித்தின் வெற்றி உறுதியாகுமென அத்தரப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே கொழும்பை மையமாக வைத்து போலியான […]
ஜனாதிபதி தேர்தல்: ஈழத்தமிழர்களிடம் வைகோ முக்கிய வேண்டுகோள்!
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தமிழ் இனத்தின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு ஈழத்தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெற வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதை அறிந்து தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். எனவே, வாக்குச் சாவடிக்குப் போகும் முன்பு, […]
சஜித்தை எப்பொழுதும் தமிழர்கள் நம்பமுடியாது அமேரிக்க!
அமேரிக்காவின் வோசிஞ்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தி ஒன்றில் சிறிலங்காவில் நடைபெறும் சனாதிபதித் தேர்தலில் யார் வென்றாலும் தமிழ்மக்களின் நிலை பரிதாபகரமாகவே இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக யார்வென்றாலும் தோல்வியடைவது தமிழ்மக்களாகவே இருக்கும் என்ற வாசகத்தை அந்த செய்தியில் குறிப்பிட்டிருப்பது மேற்குலக அரசியலின் சூழ்ச்சி ஒன்றை குறிப்பதாக இருக்கின்றது. பிரேமதாசவை தமிழீழ விடுதலைப்புலிகள் கொன்றதாகவும் எந்த சூழ்நிலையிலும் சஜித் பிரேமதாசா பெரும்பான்மை அரச இயந்திரத்திற்கு எதிராக செல்வார் என நம்ப முடியாது எனவும் அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் […]
சஜித் தோல்வியடைந்தால் தமிழீழத் தனிநாடு கோருவதற்கு வாய்ப்பு ஏற்படும் – உண்மையைப் போட்டுடைத்த இரா.சம்பந்தன்!
வரும் 16.11.2019 சனிக்கிழமை நடைபெறும் சிங்கள தேசத்து அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா தோற்கடிக்கப்பட்டால் தமிழர்கள் தனிநாடு கோருவதற்கு சர்வதேச சட்டத்தில் இடமிருப்பதாக இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். நேற்று 13.11.2019 புதன்கிழமை யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாத்திய பொதுக் கூட்டத்திலேயே இவ் இன்ப அதிர்ச்சி அறிவித்தலை இரா.சம்பந்தன் வெளியிட்டதாக ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனின் காலைக்கதிர் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. இக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் அவர்கள் […]
1000வது நாளில் காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சுழற்சி முறையிலான போராட்டம் இன்றுடன் (15) 1000 நாட்களை பூர்த்தி செய்துள்ளது. வடக்கின் ஐந்து மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்களில் வவுனியாவில் இடம்பெற்று வரும் போராட்டமே இன்று 1000 நாட்களை எட்டியுள்ளது. ஏனைய பகுதி மக்களின் போராட்டங்களும் அடுத்த சில நாட்களில் 1000 நாட்களை பூர்த்தி செய்யவுள்ளன. இதேவேளை, 1000 நாட்களாக போராடும் இந்த மக்களுக்கு இதுவரை உரிய பதிலும் தீர்வும் வழங்கப்படவில்லை. அரசியல்வாதிகளினாலும் கைவிடப்பட்ட அநாதைகள் போல் அவர்கள் போராடி வருகின்றனர். இன்னொருபுறம் […]
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கை வைக்கமாட்டேன்- சஜித் உறுதி
தாம் ஆட்சிக்கு வந்தால் எந்தவொரு சூழ்நிலையிலும், பயங்கரவாத தடைச்சட்டத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யப் போவதில்லை என்று, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நேற்று நடந்த பரப்புரைப் பேரணியில் உரையாற்றிய அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுப்பதற்கு தவறியதற்கு, பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார். அங்கு உரையாற்றிய அவர், “எந்தவொரு சூழ்நிலையிலும், நான் பயங்கரவாத தடைச்சட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்யமாட்டேன். யாருடைய பேச்சுக்கும் செவிசாய்த்து, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் சட்டங்களில் மோசமான மாற்றங்களைச் செய்ய […]
கூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தை விமர்சனம் செய்தவர் போலிக்குற்றச்சாட்டில் கைது!
சஜித் பிரேமதாசவை ஆதரித்து சங்கிலியன் பூங்காவில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட பிரச்சார கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க முனைந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமையில் மாலை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சார கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு வந்த நபர் ஒருவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை கடுமையான விமர்சித்துள்ளார். அவர் கூட்டத்திற்கு இடையூறாக இருக்கிறார் என பொலிசாரால் எச்சரிக்கப்பட்டார். பொலிசாருக்கும், அவருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் […]
தமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்! – இரா.மயூதரன்.
தமிழ் மக்களை, தமிழ் மக்களின் நிலையில் நின்று தமிழர் தேசத்தின் நோக்கு நிலையில் நின்று வழிநடாத்தவல்ல நேரிய தலைவனில்லாத சூழமைவில் நடைபெறும் மூன்றாவது சிறிலங்கா சனாதிபதித் தேர்தலானது வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலும் வகையிலேயே இன்றைய தமிழ்த் தலைமைகளின் முடிவுகள் அமைந்துள்ளது. சிறிலங்கா சனாதிபதித் தேர்தலானது குறித்தது குறித்தவாறு 2019 இறுதியில் ஏதோவொரு தினத்தில் நடக்கும் என்பது 2015 சனவரி 8 இல் மைத்திரி […]












