தாயகத்திலும் உள்ள தமிழின விரோதிகனை சந்தித்த புலம்பெயர் தமிழின விரோதிகள்

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள உலகத் தமிழர் பேரவையினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருன் கொழும்பில் விசேட சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர். இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினர்களுடன், அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். அண்மையில் இலங்கைக்கு வருகைத் தந்திருந்த உலகத் தமிழர் பரவையின் உறுப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன் போது இமாலய பிரகடனம் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. […]

தொப்புள் கொடிகளை அறுக்க சதி?

இந்திய இலங்கை மீனவர்களிடையே தமது முகவர்கள் ஊடக மோதல்களை தோற்றுவிக்க யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரகம் மும்முரமாகியிருக்கின்றது. இலங்கை கடற்படையால் வேட்டையாடப்படும் இந்திய மீனவர்களிற்கு எதிராக கடற்தொழில் சமூகத்தினர் சார்பில் சட்டத்தரணிகளை களமிறக்க இந்திய துணைதூதரகம் தூண்டிவருகின்றதென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன முன்னாள் தலைவர் அ,அன்னராசா சட்டவிரோத தொழிலில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்கள இழுவைமடி தொழிலை நிறுத்த வேண்டும். நிறுத்த தவறும் பட்சத்தில் தொப்புள் கொடி உறவாகிய தமிழ்நாடு ஆக […]

தமிழரசுக்கட்சி உடைவதனை ஏற்றுக் கொள்ளமுடியாது! சமூக விஞ்ஞான ஆய்வு மையம் கோரிக்கை.

தமிழரசு கட்சி வடக்கு கிழக்கு முகம் கொண்ட ஒரு கட்சியாகும். இடம் பெறவில்லை கட்சியின் தலமைத்துவ போட்டி காரணமாக அக் கட்சி உடையக் கூடிய வாப்புள்ள நிலையில் அதனை தவிர்ப்பதற்க்காக ஒரு கூட்டு தலமையை உருவாக்க வேண்டும் ஏன்று சமுக விஞ்ஞான ஆய்வுமையம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனரும், அரசியல் ஆய்வாளருமான சி.அ.யோதிலிங்கம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தமிழரசு கட்சியின் உயர் பீடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் மாதம் […]

பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. இந்த சட்டம் இரத்து செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்ததற்காக 9 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கண்காணிப்பாகம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. சிறுபான்மை இனத்தவர் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களை தன்னிச்சையாக தடுத்து வைத்து […]

வடக்கு- கிழக்கு மக்களுக்கு தீர்வொன்றை வழங்குங்கள் – சஜித் கோரிக்கை

வடக்கு- கிழக்கு மக்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். உலகத்துக்கு நல்லிணக்கம் தொடர்பாக எடுத்துக்கூறாமல் நாட்டிலும் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் இவ் வருடத்தின் பெப்ரவரி மாதத்திற்குள் வடக்கு கிழக்கில் காணப்படும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என […]

கொடிகாமத்தில் வீதியில் இளைஞன் மீது தாக்குதல் நடாத்திய கும்பல் – இளைஞனின் வீடு தேடி சென்றும் தாக்குதல்

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில், வீதியில் இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்ட வன்முறை கும்பல் ஒன்று , இளைஞனின் வீட்டுக்கும் சென்று தாக்குதல் நடாத்தியுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெள்ளம்போக்கட்டி பகுதி வீதியில், நேற்றைய தினம் புதன்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞனை வழிமறித்த வன்முறை கும்பல் , இளைஞன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இளைஞன் மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு, தாக்குதலாளிகளிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார். அதனை அடுத்து இளைஞனின் வீட்டுக்கு சென்ற […]

மாணவி உயிர் மாய்ப்பு: காதலன் கைது!

பதுளையில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிய நிலையில், தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 11ம் வகுப்பில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளார். தந்தை பிரிந்த நிலையில், தாயும் வெளிநாடு சென்றுள்ளார். குறித்த மாணவி வயதான தனது பாட்டியின் பாதுகாப்பில் இருந்துள்ளார். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதாக கூறிவிட்டு காதலனுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.பின்னர் வீட்டிற்கு வந்த மாணவி தனது பாட்டியின் மாத்திரைகளை உட்கொண்டதால் கடும் நோய்வாய்ப்பட்டு பதுளை வைத்தியசாலையில் […]

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் – பிரிட்டன் எம்பி

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் தற்போது மீண்டுமொரு உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுஆனால் இது பொறுப்புக்கூறலிற்கான பாதையையோ அல்லது உரிய சாட்சியங்கள் பாதுகாப்பு பொறிமுறையையோ ஏற்படுத்தாது என்ற கரிசனை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். ஸ்கொட்டிஸ் தேசிய கட்சியின் நாடாளுமன்ற […]

தமிழர் பகுதிகளில் போதை வஸ்த்து வினியோகத்தில் இராணுவத்தினர்-த.தே.ம.மு

வடக்கு-கிழக்கில் முப்படைகள் ஊடாகவே திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சுமத்தியுள்ளார். வடக்கு-கிழக்கைப் பொறுத்தவரையில் வழிகாட்டலும் ஆலோசனையும் என்பது மிக முக்கியமானது வடக்கு கிழக்கில் போதைக்கு அடிமையாதல் என்பது, மிகப் பெரும் பிரச்னையாக உருவாகிவருகின்றது. ஏனென்றால்-இலங்கை அரசானது இன்னும் ஆயுதக் கிளர்ச்சியை தோற்கடிக்கும் மனோநிலையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் முப்படைகள் ஊடாகவே போதைப் பொருள் பாவனை ஊக்குவிக் கப்படுகின்றது. அரசாங்கம் மற்றும் இராணுவத்தினரின் முழு ஒத்துழைப்புடனேயே […]

யாழில் DJ nightக்கு அனுமதி மறுப்பு!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல விடுதியில் ஒன்றில், வருட இறுதியை முன்னிட்டு (Year End) இரவு இசை நிகழ்வுக்கு (DJ night) யாழ்.மாநகர சபையிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில் மாநகர சபை அனுமதி மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் திகதி விடுதி ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்வில் (DJ night) கலந்து கொண்ட இளையோர் மது அருந்தியதாகவும் , அதில் சிலர் போதைப்பொருளை பாவித்ததாகவும் செய்திகள் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி […]

பருத்தித்துறை நீதிமன்றில் குழப்பம் – காவல்துறை உத்தியோகஸ்தர் கைது

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு விளைவித்த காவல்துறை உத்தியோகத்தர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மாளிகாவத்தை காவல் நிலையத்தில் பணியாற்றும் துன்னாலை பகுதியைச் சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர், இன்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்றத்திற்கு சாட்சியமளிப்பதற்காக சென்றிருந்தார். குறித்த நபர் நீதிமன்ற அமர்வில் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார். அதனை அடுத்து நபரை கைது செய்த, நீதிமன்ற காவல்துறையினர் பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப் படுத்தினர். சந்தேக நபரை நாளைய தினம் […]

அலெக்ஸிக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த்தாக கூறப்படும் இளைஞரிற்கு நீதி கோரி வட்டுக் கோட்டைச் சந்தியில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது;கடந்த வாரம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இருந்த அலெக்சாண்டர் என்ற இளைஞர் மிகக் கொடூரமான முறையிலே சித்திரவதை செய்யப்பட்டு அடித்து படுகொலை செய்யப்பட்டிருக்கின்ற சம்பவத்தை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். உயிரிழந்த இந்த இளைஞரும் அவரது குடும்பத்தவர்களும் சமூகத்திலே மிக […]