மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு – பிரித்தானியா

ஈழ விடுதலைப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் புலம்பெயர் தேசத்திலுள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது. மாவீரர்கள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் கிங்ஸ்பெரி லண்டன் எனும் இடத்தில் இன்று மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் மாவீரர்களது பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாவீரர் நினைவுகளை சுமந்த கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் பொதுச் சுடரினை மாங்குள சமரில் வீரகாவியமான லெப்.அழகு அவர்களின் சகோதரி சங்கேஸ்வரி ஏற்றிவைக்க தமிழீழ தேசிய கொடியினை வீரவேங்கை லெப்.கேணல் மனோஜ் அவர்களின் […]

2019 ஆண்டுக்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தல்!

தமிழ் மக்கள் தமது முடிக்குரிய ஆட்சி நிலத்தை பாதுகாத்துக் கொள்ளவும், அந்த நிலத்தில் தங்களுக்கே உரித்தான மொழி கலை கலாசாரம் மரபுரிமைகளை நிலை நிறுத்திக் கொள்ளவும், ‘தமிழீழத் தனியரசு’ ஒன்றை நிறுவுவோம் எனும் உன்னதமான இலட்சிய வேட்கையோடு களமாடி, சந்தனப் பேழைகளாகத் துயில் கொள்ளும் தமிழ்த் தேசிய இனத்தின் வீர ஆத்மாக்களை அஞ்சலித்து மதிப்புறுத்தும் தமிழர் தேசத்தின் வழிபாட்டு முறை பண்பாட்டுத் தொடர்ச்சியை, 2009 க்குப் பின்னரான நெருக்கடியான கால கட்டத்திலும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு […]

ஈழதேசத்து மன்னவனை பாடிடுவோம்

வல்லவை தந்த வல்லவனே! நீங்கள் சொன்னவை யாவும் தமிழினப் பற்றே! கற்றவை முழுதும் தமிழ் உணர்வே! சிந்தையில் என்றும் நிலைப்பதே தமிழீழமே! வரி உடையில் வாழ்த்திருப்பாய் வரிப்புலியாக பல போர்க்களங்கள் திறந்திருப்பாய் கரிகாலப் பெரு வள்ளலே – நீங்களே கலிகாலம் தகர்க்கும் ஈழ மன்னவனே! மாவீரர் ஒவ்வொருவரையும் நேசிப்பாய் மாதவம் புரிந்த புனிதர்களென பூசிப்பாய் மாறாத கொள்கை கொண்ட தமிழனே! மறவோமா உந்தன் அழகு வதனமதை படை நகர்த்தும் பாணியும் அழகு தடை தகர்க்கும் திறனும் அழகு […]

பிரபாகரன் இவருக்கு இணை, இவரே!

அதிநீள காலத்துககு ஓருமுறை, ஒர் தேசிய இனத்தின் மீட்சிக்காய், அந்த, இனத்தில் ஓர் அருந்தலைவர் உதிப்பார் என்பார்கள் அதுபோல், வேயுயர்வரீமா நுடப்ம் திணிந்தவராய், எம் துயர் வாழ்விடைத் தோன்றிய, தமிழீழ தேசத்தின் மாதலைவர், மேதகு வே. பிரபாகரன் அவர்களை தமிழ் இனத்தினரின் சிந்தைகளில் நிலைத்த அந்த, நற்திறல் வேந்தனை, அவர்தம் பண்பினிற் சிறுதுளியை.. எடுத்து, வரிவடித்துப் பார்க்கின்றோம். கண்ணியம் கடைமை கட்டுப்பாடு என்னவென்று காட்டி நிலைநாட்டிய திடமனம் உடையதோர் செம்மல், பகையஞ்சும் தகை மிகு வீரராய் வீற்றிருந்து, […]

ஜெனிவா தீர்மானத்துக்கான ஆதரவு மீள்பரிசீலனை – சிறிலங்கா அறிவிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவின் இணை அனுசரணையுடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்து நிறைவேற்றிய, சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான, 30/1 தீர்மானத்துக்கு அளிக்கப்பட்ட ஆதரவை முழுமையாக மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் இடைக்கால அரசின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தினேஸ் குணவர்த்தன நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “சிறிலங்கா இந்த தீர்மானத்தை தேசிய நோக்கில் அதை சீரான மற்றும் பாகுபாடற்றதாக […]

யாழ் பல்கலையில் தேசியத்தலைவர் பிறந்தநாள்

தமிழீழத் தேசியத் தலைவரின் 65வது அகவை தினத்தினை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிரத்தியேகமாக கொண்டாடியுள்ளனர்.

மானச்சிகரத்தின் மகுட தீபம்

வானிருக்கும் மட்டும் நீ வாழவேண்டும் – உன்னை நாம் வாழ்த்த வேண்டும் வானத்தின் எல்லை போதவில்லை – உன் வீரத்தின் எல்லை சொல்ல பூக்களின் மென்மை போதவில்லை – மன ஈரத்தின் தன்மை சொல்ல இரும்பெல்லாம் நொருங்கும் – உன் உறுதிகண்டு கருங்கல்லே உருகும் – உன் கருணை கண்டு புயலுக்கு வேகம் பழக்கினாய் பூமிக்கு பொறுமை புகட்டினாய் தாய்மைக்குப் பாசம் வழங்கினாய் நீருக்குள் நெருப்பெரிக்கும் நெறியைக் கொடுத்தாய் பூவுக்குள் பூகம்பத்திறனைப்; புகுத்தினாய் சாவுக்குள் சாதனைச் செயலை […]

ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்கியமை தவறானது – ஜனாதிபதி

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு வழங்குவதற்கு உடன்படிக்கையில் கடந்த அரசாங்கம் கைச்சாத்திட்டமை தவறானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு இந்த ஒப்பந்தம் தொடர்பாக சீன நிறுவனத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் கருத்து தெரிவித்த அவர், சீனாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் ஆனால் இராணுவ மற்றும் புவிசார் அரசியல் போட்டிகளில் ஈடுபட போவதில்லை என்றும் கூறினார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் […]

இன அழிப்பை மறந்துவிடவேண்டுமாம் – கோட்டபாய

பேரினவாதிகளின் (பெரும்பான்மை சமூகத்தின்) மனதில் சந்தேகத்தை உருவாக்கும் சில விஷயங்களை சிறுபான்மையினர் செய்தால் மட்டுமே பெரும்பான்மை சமூகம் எதிர்வினையாற்றும். அதை சிறுபான்மையினர் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் பிறந்தால் எல்லோரும் இலங்கை குடிமக்களே . அவர்களுக்கு எல்லோருக்கும் சம உரிமை உண்டு. ஆனால் சிறுபான்மையினர் சில விஷயங்களைச் செய்யக்கூடாது. அவர்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். என தெரிவித்துள்ளார் தமிழின அழிப்பு சூத்திரதாரியான கோட்டாபய ராஜபக்ச. இந்தியாவின் பாரத் சக்தி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போது […]

கார்த்திகை 27 மாவீரர் நாள் நினைவேந்தலல் நிகழ்வு அறிவித்தல்

யாழ் கோப்பாய் துயிலுமில்ல வணக்க நிகழ்வுகள் துயிலுமில்லம் அமைந்திருந்த இடத்திற்கு அண்மையில் இராச வீதியில் விசேடமாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இடத்தில் 27-11-2019 புதன்கிழமை மாலை சிறப்புற நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளன. வடமராட்சி எள்ளன்குளம் வணக்க நிகழ்வுகள் வடமராட்சி பிரதேச வணக்க நிகழ்வுகள் 27-11-2219 புதன்கிழமை பருத்தித்துறை முனை பகுதியில் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (முனை வெளிச்ச வீட்டிலிருந்து 500 மீற்றர் தொலைவில்) மேற்படி வணக்க நிகழ்வுகளுக்கு தாயக உறவுகள் அனைவரையும் அனைவரையும் அன்புடன் அழைக்ககின்றோம். மாலை 6.05 […]

மாவீரர் நாள் இவ்வாண்டு முப்பது ஆண்டுகளைத் தொட்டு நிற்கின்றது.

நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம் அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். மாவீரர் பணிமனை, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள். 25.11.2019 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 அன்பார்ந்த தமிழீழ மக்களே! நாம் எமது தாயகமாம் தமிழீழத்தின் விடுதலைக்காகவும், எமது எதிர்காலச் சந்ததியின் சுதந்திர வாழ்வுக்காகவும் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த […]

நியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

மாவீரர் தியாகம் எவ்வளவு போற்றுதலுக்குரியதோ அது போல மாவீரர் உறவுகளின் தியாகமும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது. இவர்களை மதிப்பளிக்க வேண்டியது நம் முதன்மையான கடமையில் ஒன்றாகும். அவ் வகையில் நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் 24-11-2019 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 7.30 மணியளவில் 32 A range view road, Mount Albert, Auckland 1025 எனும் இடத்தில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. முதல் நிகழ்வாக அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஈகச்சுடரினை […]