மாணவி உயிர் மாய்ப்பு: காதலன் கைது!

பதுளையில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிய நிலையில், தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 11ம் வகுப்பில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளார். தந்தை பிரிந்த நிலையில், தாயும் வெளிநாடு சென்றுள்ளார். குறித்த மாணவி வயதான தனது பாட்டியின் பாதுகாப்பில் இருந்துள்ளார். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதாக கூறிவிட்டு காதலனுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.பின்னர் வீட்டிற்கு வந்த மாணவி தனது பாட்டியின் மாத்திரைகளை உட்கொண்டதால் கடும் நோய்வாய்ப்பட்டு பதுளை வைத்தியசாலையில் […]

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் – பிரிட்டன் எம்பி

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் தற்போது மீண்டுமொரு உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுஆனால் இது பொறுப்புக்கூறலிற்கான பாதையையோ அல்லது உரிய சாட்சியங்கள் பாதுகாப்பு பொறிமுறையையோ ஏற்படுத்தாது என்ற கரிசனை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். ஸ்கொட்டிஸ் தேசிய கட்சியின் நாடாளுமன்ற […]

தமிழர் பகுதிகளில் போதை வஸ்த்து வினியோகத்தில் இராணுவத்தினர்-த.தே.ம.மு

வடக்கு-கிழக்கில் முப்படைகள் ஊடாகவே திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சுமத்தியுள்ளார். வடக்கு-கிழக்கைப் பொறுத்தவரையில் வழிகாட்டலும் ஆலோசனையும் என்பது மிக முக்கியமானது வடக்கு கிழக்கில் போதைக்கு அடிமையாதல் என்பது, மிகப் பெரும் பிரச்னையாக உருவாகிவருகின்றது. ஏனென்றால்-இலங்கை அரசானது இன்னும் ஆயுதக் கிளர்ச்சியை தோற்கடிக்கும் மனோநிலையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் முப்படைகள் ஊடாகவே போதைப் பொருள் பாவனை ஊக்குவிக் கப்படுகின்றது. அரசாங்கம் மற்றும் இராணுவத்தினரின் முழு ஒத்துழைப்புடனேயே […]

யாழில் DJ nightக்கு அனுமதி மறுப்பு!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல விடுதியில் ஒன்றில், வருட இறுதியை முன்னிட்டு (Year End) இரவு இசை நிகழ்வுக்கு (DJ night) யாழ்.மாநகர சபையிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில் மாநகர சபை அனுமதி மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் திகதி விடுதி ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்வில் (DJ night) கலந்து கொண்ட இளையோர் மது அருந்தியதாகவும் , அதில் சிலர் போதைப்பொருளை பாவித்ததாகவும் செய்திகள் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி […]

பருத்தித்துறை நீதிமன்றில் குழப்பம் – காவல்துறை உத்தியோகஸ்தர் கைது

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு விளைவித்த காவல்துறை உத்தியோகத்தர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மாளிகாவத்தை காவல் நிலையத்தில் பணியாற்றும் துன்னாலை பகுதியைச் சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர், இன்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்றத்திற்கு சாட்சியமளிப்பதற்காக சென்றிருந்தார். குறித்த நபர் நீதிமன்ற அமர்வில் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார். அதனை அடுத்து நபரை கைது செய்த, நீதிமன்ற காவல்துறையினர் பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப் படுத்தினர். சந்தேக நபரை நாளைய தினம் […]

அலெக்ஸிக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த்தாக கூறப்படும் இளைஞரிற்கு நீதி கோரி வட்டுக் கோட்டைச் சந்தியில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது;கடந்த வாரம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இருந்த அலெக்சாண்டர் என்ற இளைஞர் மிகக் கொடூரமான முறையிலே சித்திரவதை செய்யப்பட்டு அடித்து படுகொலை செய்யப்பட்டிருக்கின்ற சம்பவத்தை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். உயிரிழந்த இந்த இளைஞரும் அவரது குடும்பத்தவர்களும் சமூகத்திலே மிக […]

திருகோணமலையில் காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை,வெல்கம் விகாரை வனப்பகுதியில் பாரிய அளவிலான காணிகள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். எவ்வாறு இருப்பினும் இதுவரை எந்த ஒரு அரச அதிகாரிகளும் இது தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையில் திருகோணமலை – அனுராதபுரம் பிரதான வீதியினை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த உப்புவெளி பொலிஸார் இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்துரையாடுவதற்கு உதவி செய்வதாக உறுதியளித்ததை அடுத்து […]

புதிய தலைமையை தெரிவு செய்வதில் சிக்கல்-மாவை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையை இணக்கப்பாட்டின் அடிப்படையில் தெரிவு செய்வதற்கு முயற்சிகளை எடுத்துவருவதாக அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் தலைமைத்துவப் பதவிக்கு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் விண்ணப்பங்களைச் செய்துள்ளனர். ஆரம்பத்திலிருந்தே புதிய தலைமைக்கான தெரிவானது வாக்கெடுப்பின்றி நடைபெறவேண்டும். அதுவே கடந்த காலங்களில் சம்பிரதாயமாக இருந்து வருகின்றது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் மாவை சோ.சேனாதிராஜா தற்போது […]

ஒதியமலைப் படுகொலை நினைவேந்தலைக் குழப்பிய பொலிஸ்!

ஒதியமலைப் படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நேற்று கடைப்பிடிக்கப்பட்ட போது ஒட்டுசுட்டான் பொலிஸார் நிகழ்வில் புகுந்து குழப்பம் விளைவித்துள்ளனர். 1984ஆம் ஆண்டு டிசெம்பர் 2ஆம் திகதி அதிகாலைவேளையில் ஒதியமலைக்குள் புகுந்த இராணுவத்தினரும், சிங்களக் காடையர்களும் அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் ஆண்களை சனசமூக நிலையத்துக்கு வரவழைத்து அவர்களது ஆடைகளைக் களைந்து 27 பேரை சுட்டும், வெட்டியும் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்திருந்ததுடன், 5 பேர் கடத்தப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டனர். இதன் 39 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட […]

துவாரகா விவகாரம் : விடுதலைப் புலிகளின் போராளிகள் கட்டமைப்பு அறிக்கை

புலம்பெயர்‌ தேசங்களில்‌ தழிழ்த்தேசியம்‌ சார்பில் இயங்கும் அமைப்புக்களின்‌ செயற்பாடுகளை வலுவிழக்க இலங்கை அரசு செயற்பட்டு வருவதாக தமிழீழ விடுதலைப்‌ புலிகளின் போராளிகள்‌ கட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 27 ஆம் திகதி மாவீரர் தினத்தன்று விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் துவாரகாவின் உரையாடல் காணொளி வெளியிடப்பட்டது இந்த காணொளி தொடர்பில் போராளிகள்‌ அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது தேசவிடுதலை வரலாற்றை திரிவுபடுத்தி, கொச்சைப்படுத்தி அதன்‌ மூலம்‌ ஒட்டுமொத்த தமிழ்‌ […]

பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் உள்ளிட்டவர்களை மட்டு சிறைச்சாலைக்கு சென்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தர். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் மீது திணிக்கின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை […]

நெடுந்தீவு மக்களுக்கு படகு ஒன்றினை வழங்குவதற்கு இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை!

நெடுந்தீவு மக்களுக்கான போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை வழங்குவதற்கு இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய தூதுவர் வியாழக்கிழமை (30) நெடுந்தீவுக்கான விஜயத்தினை மேற்கொண்டு நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றார். இதன்போதே இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிடம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி குறித்த கோரிக்கையை முன்வைத்தார்.இதன்போது இந்திய தூதுவரிடம் நெடுந்தீவு மக்களுக்கான குடிநீர் தேவையினை சீராக்கும் வகையில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றையும் பெற்றுத் தருமாறும் பிரதேச […]